மேலும்

பிரதமர் வேட்பாளராக சஜித் – ரணிலுக்கு ஐதேக மீளமைப்புக்குழு  பரிந்துரை

அடுத்த பொதுத் தேர்தலில் ஐதேகவின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை முன்னிறுத்துமாறு, கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு, ஐதேக மீளமைப்புக் குழு பரிந்துரைத்துள்ளது.

லக்ஸ்மன் கிரியெல்ல, மலிக் சமரவிக்ரம, வஜிர அபேவர்த்தன, ரஞ்சித் மத்தும பண்டார, ஆஷூ மாரசிங்க, தலதா அத்துகோரள ஆகியோரைக் கொண்ட ஐதேகவின் மீளமைப்புக் குழுவே, இந்தப் பரிந்துரையை முன் வைத்துள்ளது.

அதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்திகள் குறித்து ஆராய்வதற்காக, ஐதேகவின் செயற்குழுக் கூட்டத்தை, டிசெம்பர் 20ஆம் நாளுக்கு முன்னர் கூட்டுமாறு கட்சியின் 26 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

அவர்களின் கோரிக்கையை ரணில் விக்ரமசிங்க, ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *