மேலும்

சுவிஸ் தூதரக அதிகாரியிடம் மீண்டும் விசாரணை

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ், குற்ற விசாரணைத் திணைக்களத்தில் இன்று காலை மீண்டும் முன்னிலையாகியுள்ளார்.

ஏற்கனவே அவரிடம் ஐந்து தடவைகள் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ள போது, சாட்சியம் பெறும் நடவடிக்கைகள் இன்னமும் முடியவில்லை என்று குற்ற விசாரணைத் திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில்  இன்று காலை சுவிஸ் தூதரக பணியாளர் கார்னியர் பனிஸ்டர் பிரான்சிஸ் மீண்டும் குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக  முன்னிலையாகியுள்ளார்.

சாட்சியம் பெறப்பட்ட பின்னர் அவர் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *