மேலும்

ஹப்புத்தளையில் ஐதேக கூட்டம் மீது ஆளும்கட்சி குண்டர்கள் தாக்குதல் – 5 பேர் காயம்.

பதுளை மாவட்டத்தில் உள்ள ஹப்புத்தளையில், இன்று மாலை எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக ஐதேக நடத்திய தேர்தல் பரப்புரைக் கூட்டத்தின் மீது ஆளும்கட்சியினர் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்தனர்.

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் குழுடன் ஐதேக இரகசிய ஆலோசனை

ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் குழுவொன்றுடன் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில், ஐதேகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜோன் அமரதுங்க இன்று காலை பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் ஒருநிறம்; தெற்கில் ஒரு நிறம் – மகிந்தவின் வண்ணஜாலம்

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனது தேர்தல் பரப்புரைகளில் வடக்கு, கிழக்கில் ஒரு உத்தியையும், நாட்டின் பிறபகுதிகளில் இன்னொரு விதமான உத்தியையும் பயன்படுத்தி வருகிறார்.

சீனாவின் திட்டத்துக்கு சிறிலங்காவில் வலுக்கிறது எதிர்ப்பு

சீனாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கொழும்பு துறைமுக நகரத் திட்டத்துக்கு சிறிலங்காவில் அரசியல் மட்டத்தில் மட்டுமன்றி, சுற்றுச்சூழல் அமைப்புகளிடம் இருந்தும் எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துள்ளது.

மகிந்தவின் பரப்புரைக் கூட்டங்களில் ரிசாத் பதியுதீன் இல்லை

வன்னியிலும், மட்டக்களப்பிலும் நடைபெற்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் பரப்புரைக் கூட்டங்களில், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் பங்கேற்காமல் ஒதுங்கியுள்ளது.

சிங்கப்பூரின் உத்தி சிறிலங்காவுக்கு தேவையில்லை – மகிந்தவின் அடுத்த குத்துக்கரணம்

சிறிலங்காவைச் சிங்கப்பூர் ஆக்குவேன் என்று முன்னைய ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச, இப்போது சிங்கப்பூரின் முகாமைத்துவ உத்தி சிறிலங்காவுக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் மகிந்தவுக்கு சிங்களவர்கள் எதிர்ப்பு – காவல்துறை தடியடி

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் இன்று மாலை  தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த போது, அரங்கிற்கு வெளியே, பிரதான வீதியில் அவருக்கு எதிராக சிங்களவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போர் வெற்றிக்குப் பங்களித்த அனைவரையும் பாதுகாப்பேன் – மைத்திரி வாக்குறுதி

தாம் வெற்றி பெற்றால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் எவரையும் முன்னிறுத்த அனுமதிக்கமாட்டேன் என்று எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மைத்திரியின் தேர்தல் அறிக்கை – தமிழில் கூட இல்லை

எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கை கூட தமிழில் வெளியிடப்படவில்லை என்று கொழும்பு அரசியல் வட்டாரங்களில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

மைத்திரியுடன் நேரடி விவாதம் நடத்த மகிந்த மறுப்பு

சிறிலங்கா அதிபரை பகிரங்கமான நேரடி விவாதத்துக்கு வருமாறு எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன விடுத்த சவாலை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.