மேலும்

ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்து

Ranilசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி ஆளுனர் விவகாரத்தில், சிறிலங்கா பிரதமரின் செயற்பாட்டைக் கண்டித்தும், சிறுபான்மை அரசாங்கத்தை நடத்தும், அவருக்கு எதிராகவும், இந்த நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில், பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்டுள்ள நிலையில், அது இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்கள் உள்ள நிலையில்,  இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 113 உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *