40 ஆண்டுகளுக்குப் பின்னர் சிறிலங்கா வருகிறார் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர்
சுமார் நான்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சுமார் நான்கு பத்தாண்டுகளுக்குப் பின்னர் ரஸ்ய வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் தியத்தலாவவில் உள்ள சிறிலங்கா இராணுவ பயிற்சிக் கல்லூரிக்கு எட்டு குதிரைகளை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்ளுமாறு வரும் செவ்வாய்க்கிழமை வலியுறுத்தவுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியப் பெருங்கடல் பகுதியை, அமைதி பிராந்தியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று, இந்தியா மட்டுமல்ல; இப் பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளின் கருத்து. ஆனால், சர்வதேச பாதுகாப்பு ரீதியில் இந்தியப் பெருங்கடல், தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள, வல்லரசு நாடுகள் முயன்று வருவதோடு, அதற்காகவே போட்டி போட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடுகின்றன.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர லண்டனில் புலம்பெயர் தமிழர் அமைப்பு ஒன்றுடன் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளதாகவும், இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரும் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போரினால் ஏற்பட்ட காயங்களைக் குணப்படுத்தும் நடவடிக்கையில், போரின் இறுதிக் கட்டத்தில் என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறியும் செயற்பாடு முக்கியமானது என்று சிறிலங்காவுக்கான பிரித்தானியத் தூதுவர் ஜேம்ஸ் டௌரிஸ் தெரிவித்துள்ளார்.
நான்கு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப் இன்று சிறிலங்கா இராணுவத் தளபதியைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
சிறிலங்காவில் உயிரிழந்த இந்திய அமைதிப்படையினரை நினைவு கூரும் நிகழ்வு பலாலிப் படைத்தளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்திய அமைதிப்படையினருக்கான நினைவிடத்தில் நேற்று நடைபெற்றது.
காணாமற்போனோர் தொடர்பாக விசாரிக்க சிறிலங்கா அதிபரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வரும் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, ஆணைக்குழுவின் செயலாளர் ஹேவா வாசலக குணதாச தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதன் பின்னணியில், பாகிஸ்தான் இராணுவத் தளபதி கொழும்புக்கு மேற்கொண்டுள்ள பயணம் மிக முக்கியமானது என்று பாகிஸ்தான் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.