மேலும்

பிரிவு: செய்திகள்

முன்னாள் இராணுவ அதிகாரியிடம் சிவில் பாதுகாப்புத் திணைக்களம்

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக, சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜனக ரத்நாயக்க, நியமிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மன்னனிடம் மாதம் 1 கோடி ரூபா கப்பம் வாங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்

குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரிக்கப்பட்டு வரும் போதைப்பொருள் கடத்தல் மன்னன், வேலெ சுதா, தன்னிடம் கிரமமாக பணம் பெற்று வந்த முக்கிய அரசியல்வாதிகள் பலரின் பெயர்களை வெளியிட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றம் இன்று கூடுகிறது – புதிய எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிர்ப்பு

சிறிலங்காவில் கடந்த 8ம் நாள் நடந்த அதிபர் தேர்தலில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, முதல்முறையாக இன்று நாடாளுமன்றம் கூடவுள்ளது.

வடக்கு மாகாணசபைக்கு இடையூறாக இருந்த பிரதம செயலரும் மாற்றப்பட்டார்

வடக்கு மாகாணசபையின் செயற்பாட்டுக்கு இடையூறாக இருந்து வந்த வடக்கு மாகாண பிரதம செயலர் விஜயலட்சுமி ரமேஸ், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மோடியைச் சந்தித்தார் மங்கள சமரவீர

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று மதியம் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.(இரண்டாம் இணைப்பு)

தமிழர்களுக்கு சுயாட்சி பற்றிய ரணிலின் கருத்து – கவனத்தில் கொண்டுள்ளதாம் இந்தியா

தமிழ் மக்களுக்கு கூடுதல் சுயாட்சி அதிகாரங்களை வழங்கத் தயாராக இருப்பதாக, சிறிலங்கா பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்துக் குறித்து இந்திய அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதாக இந்திய மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

3 மணிநேரப் பேச்சில் தமிழர் பிரச்சினை குறித்து ஆராய்வு – விபரங்களை வெளியிட இந்தியா தயக்கம்

தமிழர்களுடன் அரசியல் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம், இந்தியா வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை அகதிகளை திருப்பி அனுப்ப விரைவில் நடவடிக்கை? – புதுடெல்லியில் முக்கிய பேச்சு

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் நாடு திரும்புவது குறித்து, இந்திய-சிறிலங்கா அரசாங்கங்கள் மீண்டும் பேச்சுக்களை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளன.

கோத்தாபய திறந்த சர்ச்சைக்குரிய வங்கிக்கணக்கில் 13.2 பில்லியன் ரூபா

சர்ச்சைக்குரிய வகையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சினால் பேணப்பட்டு வந்த தனியான வங்கிக் கணக்கு ஒன்றில் இருந்த 13.2 பில்லியன் ரூபா பணத்தை, திறைசேரிக்கு மாற்றும்படி சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

‘றோ’வினால் தேர்தலில் வெற்றி பெறவில்லை – மங்கள சமரவீர

சிறிலங்கா அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றது, மக்களாலேயே தவிர, இந்தியப் புலனாய்வு அமைப்பான ‘றோ’வினால் அல்ல என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.