மேர்வின், சஜின், துமிந்தவுக்கு சுதந்திரக் கட்சி வேட்புமனு மறுப்பு – ஒதுங்குகிறார் சனத் ஜெயசூரிய
சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மேர்வின் சில்வா, சஜின் வாஸ் குணவர்த்தன, துமிந்த சில்வா ஆகியோருக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பளிக்கப்படமாட்டாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதன் காரணமாகவே, இம்முறை வேட்பாளர் பட்டியலில் இடமளிக்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுக்கு போட்டியிட இடமளிப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து பிரதி அமைச்சர் சனத் ஜெயசூரிய விலகியுள்ளார்.
அத்துடன் தாம் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அவர் அறிவித்துள்ளார்.
தற்போது பாகிஸ்தானில் தங்கியுள்ள அவர், இதுகுறித்து கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அறிவித்துள்ளார்.