வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் உள்நாட்டு விசாரணை – சிறிலங்கா திட்டம்
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க, புதிதாக உள்நாட்டு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து விசாரிக்க, புதிதாக உள்நாட்டு விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் வெளிவிவகார ஆலோசகர் ஜயந்த தனபால நேற்று ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேனைச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தினார்.
வடக்கில் சில இராணுவ முகாம்களின் மீது கற்களை வீசுமாறு ஒரு குழுவினரைத் தூண்டி விட்ட, இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தன்னைத் தொடர்ந்தும் பிரதம நீதியரசராகச் செயற்பட அனுமதிக்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், 44வது பிரதம நீதியரசராக இருந்த மொகான் பீரிஸ் கெஞ்சியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட புதிய அரசாங்கத்தின் 2015ம் ஆண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில், பெருமளவு பொருளாதாரச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சிறிலங்காவின் 43வது பிரதம நீதியரசரான சிராணி பண்டாரநாயக்க இன்று, உயர்நீதிமன்றத்தில் சக நீதியரசர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பணியாளர்களிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டார்.
ஐ.நா நடத்தும் போர்க்குற்ற விசாரணையின் அறிக்கை வெளியாவது தாமதமாகலாம் என்று தமிழ்மக்கள் அச்சம் கொண்டுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சர் ஹியூகோ சுவைரிடம், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர்களான யோசித ராஜபக்ச மற்றும் ரோகித ராஜபக்ச ஆகியோர், சிறிலங்கா கடற்படை மற்றும் இராணுவ ரக்பி அணிகளின் தலைவர் பதவிகளில் இருந்து நீக்கப்படவுள்ளனர்.
தமிழ்நாட்டில், மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழ் அகதிகளில் பெரும்பான்மையோர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்புவதாக, அவர்களிடம் கருத்து அறியும் சந்திப்பை நடத்திய இந்திய நாடாளுமன்ற நிலையியல்குழு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தங்கியுள்ள தமிழ் அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான பேச்சுக்களை இந்திய மத்திய அரசாங்கம் ஒத்திவைக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.