தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி
தமிழீழ விடுதலைக்காகப் போராடி உயிர் துறந்த 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களை நினைவு கூர்ந்து, உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இன்று சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.
தமிழீழ விடுதலைக்காகப் போராடி உயிர் துறந்த 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களை நினைவு கூர்ந்து, உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இன்று சுடரேற்றி வணக்கம் செலுத்தினர்.
கனவுகளை சுமந்து களமாடி மடிந்தோர் எத்தனை? முகமறிந்தோரும் முகமறியாதோருமான அனைவரும் ‘போராளிகள்’ ‘மாவீரர்கள்’ என ஒரு முகம் கொண்டனர்.
ஏறத்தாழ 25 ஆண்டுகளாக, வன்முறை எனும் பேரலைக்கு அஞ்சிய மக்களை காக்கும் பொருட்டு, எதிர்வன்முறை எனும் அணை கட்டி மாண்டவர்களுக்காக, நினைவேந்திய மகத்தான நாள் இன்று .
சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு இன்னும் காலஅவகாசம் இருப்பதால், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுப்பதில்லை என்றும், தமிழ்மக்கள் , சிவில் சமூகத்தினது கருத்துக்களைக் கேட்டறிந்து நிதானமாக முடிவெடுப்பது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இத்தேர்தல் தமிழ் தேசிய கூட்டமைப்பினதோ அல்லது அதன் உறுப்பினர்களுடையதோ அரசியற்பலத்தினையும் அவர்களது பதவிக்கதிரைகளையும் தீர்மானிப்பதல்ல. எனவே எவ்வித அவசரமும் அற்ற நிதானம் செயற்பாடுகளை தீர்மானிப்பதிலும் அறிக்கைகள் நேர்காணல்களை தருவதிலும் கருத்துரைப்பதிலும் தேவைப்படுகிறது.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று யாழ்ப்பாண மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மன்னார், வெள்ளாங்குளம் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியான கிருஸ்ணசாமி நகுலேஸ்வரன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அந்தப் பகுதி கிராம அலுவலர் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அஜித் றோகண தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் பாவனைக்கு எட்டு வாகனங்களை வழங்க இந்தியா முன்வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணியில், இன்னமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கொள்ளவில்லை என்று, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை அகதிகளை பலவந்தமாக தாயகத்துக்கு திருப்பி அழைக்கப் போவதில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.