இன்னுயிர் ஈந்தோர் அனைவரையும் நெஞ்சில் ஏந்துவோம்
கனவுகளை சுமந்து களமாடி மடிந்தோர் எத்தனை?
முகமறிந்தோரும் முகமறியாதோருமான அனைவரும்
‘போராளிகள்’ ‘மாவீரர்கள்’ என ஒரு முகம் கொண்டனர்.
“அணை கட்டலின் தோல்வி பொறிமுறை தோல்வியாகலாமேயன்றி மண்சுமந்தவரின் தவறாக முடியுமா? பொறிமுறையில் உண்டான குறையை கண்டுபிடிப்பது புதிய பொறி முறையை வகுக்க வழி காட்டித் தரும். ஆனால் மண் சுமந்தவரின் முதுகில் சாட்டையால் அடித்தால் அடியின் வலியை ஒரு நாள் எல்லோர் முதுகும் உணர நேரும்”
இன்னுயிர் ஈந்தோர் அனைவரையும் இந்நாளில் நெஞ்சில் ஏந்தி அஞ்சலிகளை தெரிவிக்கிறோம்.
– புதினப்பலகை குழுமத்தினர்.