மேலும்

செய்தியாளர்: புதினப்பணிமனை

‘ மகிந்தவை வெளியேற்ற ஒன்று திரளுங்கள்’ – முதல்வர் விக்னேஸ்வரன் அழைப்பு

வடமாகாண சபையை முடக்கப் பார்த்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை, அவரது இருக்கையை விட்டு வெளியேற்ற ஒன்று திரண்டு வாருங்கள் என்று அழைப்பு விடுத்துள்ளார்,  வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்.

‘எவர் ஆண்டால் என்ன?’ – ப.திருமாவேலன்

‘செருப்பு ஆண்ட நாடு இது, எவன் ஆண்டால் என்ன?’ என தந்தை பெரியார் ஒருமுறை கேட்டார். மக்களும் மக்களாட்சித் தத்துவமும் மரணக் குழிக்குள் தள்ளப்பட்டுவிட்ட இலங்கையில், ஜனவரி 8-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கவிருப்பதை நினைக்கும்போது இதுதான் நினைவுக்கு வருகிறது.

பல்இளித்து வாழ்வதற்காக தமிழ்மக்கள் போராடவில்லை – முதலமைச்சர் விக்னேஸ்வரன்

சிறிலங்கா அதிபரை நாடிச்சென்று, அவர் தம் சகோதரர்களுக்குப் பல்லிளித்து, வாழ்வதற்காக தமிழ் மக்கள் போராட்டம் நடத்தவோ, உயிர்த் தியாகங்களைச் செய்யவோ இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்மக்கள் புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார்கள் – இரா.சம்பந்தன்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன்  எழுத்துபூர்வ உடன்பாடு எதுவும் செய்து கொள்ளவில்லை என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் தேர்தல் 2015: தமிழ் மக்களுக்கு நன்மையான தெரிவு எது?

சிறிலங்கா அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னால் மூன்று தெரிவுகள்தான் உண்டு. ஒன்று மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பது. இரண்டு, மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது. மூன்று இருவரையும் நிராகரிப்பது. இதில் எது தமிழ் மக்களுக்கு நன்மையான முடிவாக இருக்க முடியும்? ராஜபக்சவை ஆதரித்தல் என்பது தமிழர் மனச்சாட்சிக்கு பொருந்தாத ஒன்று. எனவே முதலாவது தெரிவு குறித்து விவாதிப்பதில் பொருளில்லை – யதீந்திரா.

கொழும்பின் அரசியல் சகதிக்குள் புதையுண்டு போகும் ஈழத்தமிழினம்?

தமிழர்களின் தாயகம் அவர்களின் அடையாளம் தேசிய அளவில் ஒரு இனமாக அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகள் அனைத்தும் பின்தள்ளப்படும் நிலையை உருவாக்குவதும் அரச அதிகாரத்தையும் அதன் கட்டமைப்பையும் வடக்கு கிழக்கில் வாழும் தமிழர்கள் ஏற்று கொள்கின்றார்கள் என்பதை அனைத்துலகுக்கும் எடுத்து காட்டவும் இந்த தேர்தல் உதவ உள்ளது.

பெருவெள்ளத்தில் தத்தளிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக  கொட்டி வரும் பெருமழையால், பெரும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில், ஆறுகள் பெருக்கெடுத்தும், குளங்கள் நிரம்பியும், பல பகுதிகள் வெள்ளக் காடாக மாறியுள்ளன.

அதிபர் செயலக அறிக்கையை மறுக்கிறது ரிசாத் பதியுதீன் கட்சி – இன்னமும் முடிவு செய்யவில்லையாம்

ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதாக, அதிபர் செயலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை பொய்யானது என்றும், தாம் இதுபற்றி இன்னமும் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்றும் அந்தக் கட்சியின் பொதுச்செயலர் வை.எல்.எஸ்.ஹமீத் தெரிவித்தார்.

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து தேசிய அரசே ஆராயுமாம் – நழுவுகிறார் மைத்திரி

அதிபர் தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்படும் தேசிய அரசாங்கமே, தமிழர் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராயும் என்று, எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவை வழிக்கு கொண்டுவர பொருளாதாரத் தடை அவசியம் – ரிச்சர்ட் ஓட்டாவே

மனித உரிமைகள் விவகாரத்தில் ஐ.நாவுக்கு ஒத்துழைக்க மறுக்கும் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை அதிகரிக்க, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பிரித்தானியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, அந்த நாட்டின் நாடாளுமன்ற வெளிவிவகாரக் குழுத் தலைவர் தலைவர் ரிச்சர்ட் ஓட்டாவே தெரிவித்துள்ளார்.