மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

சிறிலங்காவில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழு ஆய்வு

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்துலக திணைக்கள மூத்த ஆய்வு ஆலோசகர் கலாநிதி சாய் ஷாங்ஜின் தலைமையிலான குழுவே கொழும்பு வந்துள்ளது.

அரசியலமைப்புத் திருத்தம் மரணப் பொறி – என்கிறார் மகிந்த

அரசியலமைப்பைத் திருத்தும் தற்போதைய நகர்வுகள் ஒரு  மரணப் பொறி என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புதிய கட்சியைப் பதிவு செய்ய மகிந்த அணியினர் எடுத்த முயற்சி தோல்வி

மகிந்த ராஜபக்ச தலைமையில் செயற்படும் கூட்டு எதிரணியினர் புதிய அரசியல் கட்சி ஒன்றைப் பதிவு செய்வதற்கு எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. புதிய அரசியல் கட்சியை இப்போது பதிவு செய்ய முடியாது என்று, கூட்டு எதிரணியினருக்கு சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பிரகீத் கடத்தப்பட்ட வழக்கில் கைதான 4 இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்கு பிணை

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நால்வர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா விமானப்படைத் தளபதியாக எயர் மார்ஷல் கபில ஜெயம்பதி நியமனம்

சிறிலங்கா விமானப்படையின் புதிய தளபதியாக, எயர் வைஸ் மார்ஷல் கபில ஜெயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவுக்கு அமெரிக்காவில் நியமனம்

நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்துக்கான புதிய இராணுவ இணைப்பதிகாரியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

மோதலுக்கான காரணிகளுக்குத் தீர்வு காணத் தவறியுள்ளது சிறிலங்கா- மங்கள சமரவீர

மோதல்களுக்கான காரணிகளுக்கு தீர்வு காண சிறிலங்கா தவறியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்படுவது குறித்து சிறிலங்கா ஆலோசனை

காணாமற்போனோர் தொடர்பான ஐ.நா செயலணியுடன் இணைந்து செயற்படுவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு, சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.

அடுத்தவாரம் தொடங்குகிறது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடர்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13ஆம் நாள், தொடங்கி 30 ஆம் நாள் வரை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.

சிறிலங்காவில் இந்தியர்களைப் பின்தள்ளும் சீனர்கள்

சிறிலங்காவின் சுற்றுலாப் பயணிகள் சந்தையில் தொடர்ந்து இரண்டாவது மாதமாக இந்தியர்களை பின்னுக்குத் தள்ளிக் கொண்டு, சீனர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.