மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

இரகசியத் தடுப்பு முகாம்கள் குறித்து விசாரிக்கத் தயார் என்கிறது சிறிலங்கா அரசு

இரகசியத் தடுப்பு முகாம் தொடர்பான ஐ.நா குழுவின் குற்றச்சாட்டுத் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் விசாரணை நடத்த தயாராக இருப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்ன தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிராக ராவண பலய பிக்குகள் போராட்டம்

அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிராக நேற்று கொழும்பில் போராட்டம் நடத்திய இராவண பலய அமைப்பு, நாகதீப என்பதை நயினாதீவு என்று  பெயர் மாற்றம் செய்தால், அனைத்து தமிழ் கிராமங்களின் பெயர்களையும் தாம் அகற்றுவோம் என்றும் எச்சரித்துள்ளது.

ஐ.நா குழுவைச் சந்தித்தோருக்கு அச்சுறுத்தல் – சிறிலங்கா அரசு விசாரிக்கும் என்கிறார் மங்கள

காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவிடம் சாட்சியமளித்தோர், அச்சுறுத்தப்பட்டதான குற்றச்சாட்டுத் தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோர் குறித்து நம்பகமான விசாரணை நடத்த வேண்டும் – ஐ.நா குழு கோரிக்கை

சிறிலங்காவில் காணாமற்போனோர் தொடர்பாக, அவர்களின் உறவினர்களுக்கு உண்மையை அறியத்தரும் வகையில், நம்பகமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது.

திருகோணமலையில் இரகசிய தடுப்பு முகாமைக் கண்டுபிடித்ததாக ஐ.நா குழு அறிவிப்பு

திருகோணமலை சிறிலங்கா கடற்படை தளத்தில், இரகசியத் தடுப்பு முகாம் ஒன்றைத் தாம் பார்வையிட்டதாகவும், அது தமது பயணத்தின் முக்கியமான கண்டுபிடிப்பு எனவும், பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழு தெரிவித்துள்ளது.

‘புலிகளின் ஆதரவாளர் சமந்தா பவருக்கு சிறிலங்காவில் என்ன வேலை?’ – கம்மன்பில கேள்வி

அமெரிக்காவிலும், ஐ.நாவிலுமே கடமையைக் கொண்டிருக்கும், சமந்தா பவர் சிறிலங்காவுக்கு வருவது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில.

அரசியல் கைதிகளுக்கான புனர்வாழ்வுக் காலத்தை நீதிமன்றமே தீர்மானிக்கும்

சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கான புனர்வாழ்வு காலத்தை நீதிமன்றமே தீர்மானிக்கும் என்று சிறிலங்காவின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி, இராணுவ பிரசன்னத்தை குறைக்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி, வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைத்து,  இராணுவத்தின் வசமுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தினர் அரசியல் கைதிகள்

தமது விடுதலைக்காக ஒன்பது நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை  மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள், தமது போராட்டத்தை இன்று காலை தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதாக அறிவித்துள்ளனர்.

அரசியல் கைதிகளைப் புனர்வாழ்வுக்கு அனுப்ப கூட்டமைப்பு கோரவில்லை- சுமந்திரன்

தமிழ் அரசியல் கைதிகளை புனர்வாழ்வு அளித்து விடுவிப்பது தொடர்பான பரிந்துரையை சிறிலங்கா அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.