மேலும்

அடுத்தவாரம் தொடங்குகிறது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடர்

UNHRCஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13ஆம் நாள், தொடங்கி 30 ஆம் நாள் வரை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கூட்டத் தொடரின் நிகழ்ச்சி நிரலில், சிறிலங்கா விவகாரங்கள் எதுவும் உள்ளடக்கப்படவில்லை. எனினும், சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக, உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் கருத்துக்களை வெளியிட்டு கேள்விகளை எழுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின்,33 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்காவில் இருந்து உயிர்மட்டக் குழுவினர் எவரும் பங்கேற்கவில்லை.

ஜெனிவாவில் உள்ள சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி, ரவிநாத ஆரியசிங்கவே, இந்தக் கூட்டத்தொடரில் கலந்து கொண்டு, உறுப்பு நாடுகளின் சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் பதிலளிப்பார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர்  செயிட் ராட் அல் ஹுசேன், எதிர்வரும் 13ஆம் நாள், 33 ஆவது கூட்டத்தொடரில் ஆரம்ப உரை நிகழ்த்தும் போது, சிறிலங்கா தொடர்பான கருத்துக்களையும் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *