மோதலுக்கான காரணிகளுக்குத் தீர்வு காணத் தவறியுள்ளது சிறிலங்கா- மங்கள சமரவீர
மோதல்களுக்கான காரணிகளுக்கு தீர்வு காண சிறிலங்கா தவறியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்லோவெனியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
நிலையான அமைதி, அர்த்தமுள்ள நல்லிணக்கம், மீளநிகழாமையை உத்தரவாதப்படுத்துவதன் மூலமே, மோதலுக்கான காரணிகளுக்குத் தீர்வு காண முடியும்.
சமூகத்தில், மத மற்றும் இன ரீதியான பிளவுகள் கூர்மை பெற்றிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.