மேலும்

செய்தியாளர்: மட்டக்களப்புச் செய்தியாளர்

கூட்டமைப்புக்கு பேரம்பேசும் சக்தி கிட்டும்; ஆனால் பதவிக்காக பல்இழிக்கமாட்டார்கள் – பசீர் சேகுதாவூத்

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பேரம் பேசும் சக்தி கிடைக்கும். ஆனால் அது பதவிக்காக பல் இழிக்கும் கட்சி அல்ல. இனத்தின் விடுதலை, இனத்திற்கு, இனப்பிரச்சினைக்கு தீர்வைத் தரும் உடன்பாட்டோடு தான் அவர்கள் தமது ஆதரவை வழங்குவார்கள்.

மட்டக்களப்பில் இளம்பெண்ணை சுட்டுக்கொன்ற ஈபிடிபி உறுப்பினருக்கு மரணதண்டனை

மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் கடந்த 2007ஆம் ஆண்டு இளம்பெண் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த, ஈ.பி.டி.பி உறுப்பினர் ஒருவருக்கு நேற்று மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

மட்டக்களப்பில் 46 அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் போட்டி

வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தம் 46 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியில் குதித்துள்ளன. இன்று நண்பகலுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததையடுத்து, மட்டக்களப்பு மாவட்டத் தெரிவத்தாட்சி அதிகாரி பி.எஸ்.எம். சாள்ஸ் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் போட்டியிடும் கூட்டமைப்பின் எட்டாவது வேட்பாளர் சௌந்தரராஜன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் எட்டாவது வேட்பாளராக- முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.சௌந்தரராஜன் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் எட்டாவது வேட்பாளர் யார்?

அடுத்தமாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் எட்டாவது வேட்பாளர் யார் என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று தெரியவருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் குதிக்கும் 13 கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்

வரும் ஓகஸ்ட் 17ஆம் நாள் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், சுமார் 13 வரையான கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பில் கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க கடும் போட்டி

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தீர்மானிக்கும் முயற்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டம் தீவிர ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மட்டக்களப்பில் இனந்தெரியாத நபர்களால் ஒருவர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு, மண்டூரில் இன்று காலை இனந்தெரியாத நபர்களால், அரசாங்க அதிகாரி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் சமூக சேவை அதிகாரியாக பணியாற்றும், 44 வயதான சச்சிதானந்தம் மதிதயான் என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவராவார்.

வித்தியா கொலையைக் கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தினால் முற்றாக முடங்கியது மட்டக்களப்பு

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடத்தப்பட்ட கடையடைப்பு போராட்டத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் இன்று முற்றிலும் செயலிழந்தன.

தமிழிலேயே பாடுங்கள் என்று தமிழர்களுக்கு அறிவுரை கூறிய சிறிலங்கா அமைச்சர்

வடக்கு, கிழக்கில் சிறிலங்காவின் தேசிய கீதத்தை தமிழிலேயே பாடுங்கள் என்று சிறிலங்காவின் சிங்கள அமைச்சர் ஒருவரே தமிழர்களுக்கு அறிவுரை கூற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.