மேலும்

ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் சிறிலங்கா அதிபருடன் தொலைபேசியில் பேச்சு

ban-ki-moonஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன், நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியுள்ளார். இதுதொடர்பாக சிறிலங்கா அதிபரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டில் வெவ்வேறு இனக் குழுக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் அமைதியைக் கொண்டு வரும் முயற்சி உள்ளிட்ட சிறிலங்கா அதிபரின் நடவடிக்கைகளை ஐ.நா பொதுச்செயலர் பாராட்டியுள்ளார்.

அத்துடன் 19வது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றிய மைத்திரிபால சிறிசேனவின் அர்ப்பணிப்பையும் அவர் புகழ்ந்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, தற்போதைய தேர்தல் முறையை மாற்றியமைக்கும் 20வது திருத்தச்சட்டத்தையும் நிறைவேற்றுவதற்காக தான் பணியாற்றிய வருவதாக சிறிலங்கா அதிபர் தெரிவித்துள்ளார் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *