மஹர சிறைச்சாலைக்குள் பதற்றம்- சிறப்புக் காவல் குழுக்கள் விரைவு
மஹர சிறைச்சாலைக்குள் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
சூழ்நிலையை மதிப்பிடுவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பல சிறப்பு காவல் குழுக்கள் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட குழப்பங்களுக்கான காரணம் அல்லது ஏதேனும் காயங்கள் ஏற்பட்டதா என்பது குறித்த மேலதிக விவரங்கள் உடனடியாகக் கிடைக்கவில்லை.
