மேலும்

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான மனுக்களின் விசாரணை – நாளை வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தை கலைத்து  சிறிலங்கா  அதிபர் வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று  உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது.

தலைமை நீதியரசர் நளின் பெரேரா  தலைமையிலான, 7 நீதியரசர்களைக் கொண்ட அமர்வின் முன்பாக இந்த மனுக்கள் இன்று காலை தொடக்கம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இன்று மாலை வரை தொடர்ந்து இந்த மனுக்களின் மீது விசாரணைகள் நடத்தப்பட்டன. இதையடுத்து, நாளை காலை வரை இந்த விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மூன்று நாட்கள் இந்த மனுக்கள் விசாரிக்கப்படும் என்று ஏற்கனவே, உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *