மேலும்

நாடாளுமன்றத்தின் நாளைய அமர்வையும் புறக்கணிக்கிறது மகிந்த தரப்பு

நாடாளுமன்றத்தின்  நாளைய அமர்வையும்,  புறக்கணிக்க போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களாக,  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நாடாளுமன்ற அமர்வுகள் புறக்கணித்து வருகிறது.

நாளைய அமர்வில்,  புதிய பிரதமரை நியமிக்க கோரி தீர்மானம்  ஒன்றை நிறைவேற்றுமாறு சிறிலங்கா அதிபர் கூறியிருந்தார்.

இந்த தீர்மானம் நாளை,  வாக்கெடுப்புக்கு விடப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையிலேயே,  மகிந்த ராஜபக்ச தரப்பு  நாடாளுமன்ற அமர்வை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

அதேவேளை நாளைய அமர்வின் போதும்,  பார்வையாளர் மாடம் மற்றும்,  விருந்தினர்கள் மாடம்  என்பன  மூடப்பட்டிருக்கும் என்று,  படைக்கல சேவிதர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *