மேலும்

மட்டக்களப்பில் இரு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக்கொலை

மட்டக்களப்பு- வவுணதீவில்  இரண்டு சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

வவுணதீவு சோதனைச்சாவடியில், இரவுக் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு சிறிலங்கா காவல்துறையினரே இன்று காலை 6 மணியளவில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இவர்கள் இறந்து கிடந்தனர். தினேஸ், பிரசன்னா ஆகிய இரண்டு காவலர்களே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

இனந்தெரியாத நபர்கள் இவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை நடத்த, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என்று காவல்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *