கொழும்பு வந்து சேர்ந்தார் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ
பிரித்தானியாவுக்கான சிறிலங்கா தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ இன்று பிற்பகல் சிறிலங்காவை வந்தடைந்துள்ளார்.
லண்டனில் சிறிலங்கா தூதரகம் முன்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, கழுத்தை அறுத்து விடுவது போல சைகையில் எச்சரிக்கை செய்த விவகாரத்தை அடுத்து இவர் சர்ச்சையில் சிக்கியிருந்தார்.
இந்த நிலையில் சிறிலங்கா இராணுவத் தளபதி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை சிறப்பு கலந்துரையாடலுக்காக கொழும்புக்குத் திருப்பி அழைத்துள்ளார்.
இதற்கமைய இன்று பிற்பகல் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இவருக்கு எதிராக விசாரணைகளோ, ஒழுங்கு நடவடிக்கைகளோ எடுக்கப்படாது என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் நேற்று கூறியிருந்தார்“ என்பது குறிப்பிடத்தக்கது.