டாக்காவில் பணயம் வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் மீட்பு
டாக்காவில் விடுதி ஒன்றில் ஆயுததாரிகளால் பணயக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
டாக்காவில் உள்ள விடுதியொன்றில் நேற்றிரவு நுழைந்த ஆயுததாரிகளால், வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட பலரும் பணயக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்தனர்.
இன்று காலை இவர்களை மீட்க பங்களாதேஸ் கொமாண்டோக்கள் அதிரடித் தாக்குதலை நடத்தினர். இதன்போது 6 ஆயுததாரிகள் கொல்லப்பட்டதுடன் ஒருவர் சிறைபிடிக்கப்பட்டார்.
அங்கு பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட 14 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இரண்டு இலங்கையர்களும் அதிர்ச்சியடைந்த நிலையில் இருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை என்று பங்களாதேசில் உள்ள சிறிலங்கா தூதரகம் தெரிவித்துள்ளது.