சிறிலங்காவுடனான இராணுவ ஒத்துழைப்பு நட்பு, நம்பிக்கையின் அடிப்படையிலானது – ரஸ்யா
சிறிலங்காவுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான நீண்டகால உறவுகள், மக்கள் மற்றும் ஆயுதப்படைகளுக்கிடையிலான நம்பிக்கை மற்றும் உண்மையான நட்புறவை அடிப்படையாகக் கொண்டது என்று ரஸ்யா தெரிவித்துள்ளது.
ரஸ்யத் தூதரகத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் கடந்தவாரம் நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே கொழும்பிலுள்ள ரஸ்யத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் டிமிட்றி மிக்கேலோவ்ஸ்கி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எமது இருதரப்பு இராணுவ ஒத்துழைப்பு, பாதுகாப்பு, உறுதித்தன்மை, மற்றும் பதற்றம் அதிகரிப்பதை தடுத்தல் ஆகிய இலக்கை அடிப்படையாக கொண்டது.
உலகில் அமைதி மற்றும் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தவும், தனது பங்காளர்களுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், ரஸ்யா தேவையான எல்லாவற்றையும் மேற்கொள்ளும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.