செம்மணியில் ஒன்றின் மேல் ஒன்றாக எலும்புக்கூடுகள் – இன்றும் 9 அடையாளம்
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் 9 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 42 ஆவது நாள் அகழ்வுப் பணி இன்று காலை 8 மணி தொடக்கம் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதிவான் எஸ் . லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்போது, 9 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதையடுத்து இதவரை அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை, 231ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட 7 மனித எலும்புக்கூடுகள் இன்று முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு பொதியிடப்பட்டு நீதிமன்றத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் 213 மனித எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.