மேலும்

ஷசீந்திர ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்சவை, விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

நேற்றுக்காலை நுகேகொடவில் உள்ள இல்லத்தில் வைத்து, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை, விசாரிக்கும் ஆணைக்குழு அதிகாரிகளால், ஷசீந்திர ராஜபக்ச கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் முன்னிலையில் நிறுத்திய போது, எதிர்வரும் ஓகஸ்ட்19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

தனக்குச் சொந்தமாக இல்லாத சொத்துக்கு சட்டவிரோதமாக இழப்பீடு பெற்றுக் கொண்டார் என ஷசீந்திர ராஜபக்ச மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு மே 22ஆம் திகதி மக்கள் போராட்டத்தின் போது, செவனகல – கிரிஇப்பன்வெவ பகுதியில் உள்ள- மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான கட்டடம் சேதமாக்கப்பட்டது.

இதனை தனது கட்டடம் என்று காட்டி,  ஷசீந்திர ராஜபக்ச இழப்பீடு கோரியிருந்தார்.

ஆனால் அது மகாவலி அதிகாரசபைக்கு சொந்தமானது என்று கூறி இழப்பீட்டுக் கோரிக்கை அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.

எனினும், அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஷசீந்திர ராஜபக்ச அந்தச் சொத்துக்காக சட்டவிரோதமாக இழப்பீட்டைப் பெற்றுள்ளார்.

சட்டவிரோதமாக இழப்பீடு பெற்றுக் கொண்டது, ஒரு ஊழல் என்று குற்றம்சாட்டியே ஷசீந்திர ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *