மேலும்

செம்மணியில் இன்றும் 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள்

யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றும் 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதையடுத்து இதுவரை இனங்காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 28ஆவது நாள் அகழ்வு இன்று இடம்பெற்ற போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, இதுவரை அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.

                         படம்- முகநூல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *