ஜெர்மனி அதிபரைச் சந்தித்தார் அனுரகுமார திசாநாயக்க
ஜெர்மனிக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஜெர்மன் அதிபர் பிராங்க் – வோல்டர் ஸ்டெய்ன்மரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
பேர்லினில் உள்ள பெல்லூவ் அரண்மனையில் சிறிலங்கா அதிபருக்கு ஜெர்மனி ஆயுதப்படைகளால் சம்பிரதாய ரீதியான மரியாதை அளிக்கப்பட்டது.
முழு அரசு மரியாதைகளுடன் வரவேற்கப்பட்ட அவர், இராணுவ அணிவகுப்பையும் பார்வையிட்டார்.
வரவேற்பு விழாவிற்குப் பின்னர், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவும் ஜெர்மனி அதிபர் ஸ்டெய்ன்மியரும் இருதரப்பு பேச்சுக்களை நடத்தினர்.
தொழிற்பயிற்சி மற்றும் சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் சர்வதேச உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுக்களில் கவனம் செலுத்தப்பட்டது.
அதேவேளை ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஜொஹான் வாடிபுல்லை, பேர்லினில் சிறிலங்கா அதிபர் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.