இராணுவ உறவுகள் இராஜதந்திரத்தின் ஒரு முக்கிய பகுதி – அமெரிக்க தூதுவர்
இராணுவத்துக்கும் இராணுவத்துக்கும் இடையிலான உறவுகள், இராஜதந்திரத்தின் ஒரு முக்கியமான பகுதியாகும் என, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் பணியாற்றும் 12 நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும், சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று கொழும்பில் சந்தித்து, பாதுகாப்பு ஒத்துழைப்புக் குறித்த கலந்துரையாடலை நடத்தியுள்ளனர்.
இதில் சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், சிறிலங்காவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் மற்றும் 12 நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள், சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ள, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ், “இராணுவத்துக்கும் இராணுவத்துக்கும் இடையிலான உறவுகள், இராஜதந்திரத்தின் முக்கியமான ஒரு பகுதியாகும்” என குறிப்பிட்டுள்ளார்.