மேலும்

சஜித்துக்கு வாய்ப்பளிக்காவிடின் அரசியலுக்கு முழுக்கு – நளின் பண்டார

அதிபர் தேர்தலில் போட்டியிட சஜித் பிரேமதாசவுக்கு வாய்ப்பளிக்கப்படாவிட்டால், அரசியலில் இருந்து விலகி, மீண்டும் ஆசிரியத் தொழிலில் ஈடுபடப் போவதாக பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

“சஜித் பிரேமாதாசவுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அவரால் மட்டுமே, வெற்றி பெற முடியும். அவர் அடுத்த அதிபர் ஆவார் என்ற நம்பிக்கையில் மக்கள் இருக்கிறார்கள்.

சஜித்தை நிறுத்தாவிடின் ஐதேக தோல்வியடையும் என்பது எமக்குத் தெரியும். அவருக்குப் பதிலாக யாரை நிறுத்தினாலும், அதே முடிவுதான் ஏற்படும்.

எனவே, அரசியலில் இருந்து விலகி ஆசிரியத் தொழிலுக்குத் திரும்புவேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *