மேலும்

தனித்துப் போட்டியிட சஜித் அணி ஆலோசனை

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது தொடர்பாக, நேற்று கூட்டம் ஒன்றை நடத்தி ஆலோசனை நடத்தியுள்ளனர்.

ஐதேகவின் தவிசாளர் கபீர் காசிம் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்தில் நேற்று இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

ஐதேக தலைமைப்பீடம், சஜித் பிரேமதாசவுக்கு அதிபர் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்காவிட்டால், தேர்தலில் மாற்று ஏற்பாடுகளின் கீழ் போட்டியிடுவது குறித்தே இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இதில், ஐக்கிய தேசியக் கட்சியின் 60 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *