நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கு எதிராக சஜித் தரப்பு போர்க்கொடி
அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சிமுறையை ஒழிக்கும் திட்டத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
இன்று பிற்பகல் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிப்பதற்கு தாம் எதிர்ப்பை வெளியிடுவதாகவும், இதற்கான எந்த முயற்சிகளும், அதிபர் தேர்தலுக்கு பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக, அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.