மேலும்

ரணில், சஜித், கரு இன்று முக்கிய சந்திப்பு

அதிபர் வேட்பாளர் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் இன்று சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளனர்.

இன்று மாலை 6 மணிக்கு, இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

ஐதேகவின் இந்த மூன்று தலைவர்களும் அதிபர் வேட்பாளர் தொடர்பாக முடிவெடுப்பார்கள் என்று பிரதமர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தச் சந்திப்பு நடைபெறவிருந்த போதும், சஜித் பிரேமதாசவின் கோரிக்கைக்கு அமைய பிற்போடப்பட்டது.

இன்றைய பேச்சுக்களில் தான் பங்கேற்பேன் என்றும், தனக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் கிடையாது என்றும் யாழ்ப்பாணத்தில் நேற்று சஜித் பிரேமதாச கூறியிருந்தார்.

அத்துடன் தான் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவது நிச்சயம் என்றும், அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *