மேலும்

பாதுகாப்பு அமைச்சின் கீழ் ரூபவாஹினி – சிறிலங்கா அதிபர் அதிரடி

சிறிலங்காவின் அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி நிறுவனத்தை, நேற்று நள்ளிரவில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தன்வசமுள்ள பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டின் கீழ், கொண்டு வந்துள்ளார்.

முன்னர் ஊடகத்துறை அமைச்சின் கட்டுப்பாட்டில் இருந்த ரூபவாஹினி கூட்டுத்தாபனம், நேற்று நள்ளிரவில் இருந்து பாதுகாப்பு அமைச்சின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுவதாக, சிறிலங்கா அதிபர் நேற்றிரவு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் நியமனம் மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக, எழுந்த சர்ச்சைகளை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை, எந்த நேரத்திலும் அதிபர் தேர்தலை அறிவிப்பதற்கான அதிகாரம் நேற்று நள்ளிரவு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *