மேலும்

ஐதேக வேட்பாளருக்கு ஆதரவாக திரும்பும் ராஜபக்ச அனுதாபிகள்

வரும் அதிபர் தேர்தலை இலக்கு வைத்து, பரந்துபட்ட தேசிய கூட்டணியை ஐதேக அறிவித்த பின்னர், மகிந்த ராஜபக்சவின் அணியில் உள்ள முன்னணி அரசியல்வாதிகள் பலர் அதற்கு ஆதரவு அளிப்பார்கள் என, ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ ராஜகருண தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

”2015 இல் தற்போதைய அரசாங்கத்தை அமைப்பதை ஆதரித்த ராஜபக்ச எதிர்ப்பு சக்திகள் மீண்டும் ஒன்றிணைந்துள்ளன.

பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உட்பட ராஜபக்சவுக்கு ஆதரவான பலரின் ஆதரவின் காரணமாக, இந்த அணி மேலும் வலுப்பெற்றுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கவுள்ளவர்களின் பெயர்களை இப்போது வெளியிட முடியாது.

ஐக்கிய தேசிய முன்னணியின் அதிபர் வேட்பாளர் குறித்து கட்சி சரியான நேரத்தில் முடிவெடுக்கும்.

ஜனநாயக ரீதியாக கட்சிக்குள் மூன்று யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பொதுஜன பெரமுனவைப் போல அன்றி,  நாங்கள் வித்தியானமான யோசனைகளை முன்வைத்துள்ளோம்.

பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு உள்ள ஒரே தகைமை, ராஜபக்ச என்ற முதல்பெயர் மாத்திரம் தான்.

ஏன் அவர்களால் மூத்த அரசியல்வாதிகளான தினேஸ் குணவர்த்தனவையோ, குமார வெல்கமவையோ வேட்பாளராக அறிவிக்க முடியவில்லை?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *