மேலும்

டிசெம்பர் 7இற்கு முன் அதிபர் தேர்தல்

சிறிலங்காவின் புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், நொவம்பர் 15ஆம் நாளுக்கும், டிசெம்பர் 7ஆம் நாளுக்கும் இடையில் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

“செப்ரெம்பர் 15ஆம் நாளுக்கும் ஒக்ரோபர் 15ஆம் நாளுக்கும் இடையில், அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு தேர்தல் செயலகத்தினால் வெளியிடப்படும்.

இது சிறிலங்காவில் நடத்தப்படும் எட்டாவது அதிபர் தேர்தல்.

வாக்களிப்பு நாளுக்கு முன்னதாக, வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கும், பரப்புரைகளை செய்வதற்கும் குறைந்தது 50 நாட்கள் எமக்குத் தேவை.

அரசியல் கட்சிகள் ஆர்வம் காட்டினால், ஒக்ரோபர் 15ஆம் நாளுக்கு முன்னர் மாகாண சபைத் தேர்தல்களை நடத்தலாம்.” என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *