மேலும்

ரியூனியன் தீவை நோக்கி சிறிலங்கா குடியேற்றவாசிகளின் மற்றொரு படகு?

சிறிலங்காவில் இருந்து சட்டவிரோத குடியேற்றவாசிகள் என சந்தேகிக்கப்படுபவர்களை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று வந்து கொண்டிருப்பதாக ரியூனியன் தீவு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

ரியூனியன் தீவு ஊடகச் செய்திகள் இதனைத் தெரிவித்துள்ளன.

சிறிலங்காவில் இருந்து ஜூலை 12ஆம் நாள் படகு ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என்றும் அது, ரியூனியன் தீவை நோக்கிச் செல்லக் கூடும் என்றும், சிறிலங்கா அதிகாரிகளால் எச்சரிக்கைத் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எனினும், இந்தப் படகை தாம் இன்னமும் கண்டுபிடிக்கவில்லை என்றும், அந்தப் படகு ரியூனியன் தீவை நோக்கியே பயணிக்கிறது என்பதும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *