மேலும்

அரசியலமைப்பு திருத்தம் குறித்து இரண்டு நாள் விவாதம் – கூட்டமைப்பின் கோரிக்கை ஏற்பு

அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  முன்வைக்கவுள்ள, ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது, அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை, நாடாளுமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விடுத்த கோரிக்கையை அடுத்து, அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பாக, ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீது இரண்டு நாட்கள்  விவாதம் நடத்த, இணக்கம் காணப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 25, 26ஆம் நாள்களில் இந்த விவாதம் இடம்பெறவுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்ட அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான கலந்துரையாடல்களை மீள ஆரம்பிக்கும் நோக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்த விவாதத்தைக் கோரியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *