மேலும்

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றில் மனு

மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்த தேர்தல்கள் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் நேற்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உண்மை தேடுவோர் என்ற அமைப்பின் சார்பில், சட்டவாளர் பிரேமநாத் டொலேவத்த இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இவர் மகிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமானவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த மனுவில் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

எல்லைகளை வரையறுக்கும் அறிக்கையைக் காரணம் காட்டி  அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலைப் பிற்போடுவதாக மனுதாரர் கூறியுள்ளார்.

மாகாணசபைத் தேர்தல்களை விரைவாக நடத்தும்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறும், அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *