மேலும்

சிறிலங்கா – ஜப்பான் கடற்படை அதிகாரிகளுக்கிடையில் முதலாவது கலந்துரையாடல்

சிறிலங்கா- ஜப்பானிய கடற்படைகளுக்கு இடையிலான முதலாவது, அதிகாரிகள் மட்ட கலந்துரையாடல் கொழும்பில் கடந்த 14ஆம், 15ஆம் நாள்களில் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் இரண்டாவது நாளான நேற்று முன்தினம்,சிறிலங்கா பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, ஜப்பானிய பிரதமரின் சிறப்பு ஆலோசகர் கென்ராரோ சொனோரா ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த இரண்டு நாள் கலந்துரையாடலில் சிறிலங்கா கடற்படையின் கடல் நடவடிக்கை பணிப்பாளர் கொமடோர் சஞ்சீவ டயஸ் தலைமையிலான 10 கடற்படை அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஜப்பானிய தரப்பு குழுவுக்கு, கடல் அதிகாரிகள் பணியகத்தின் திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் பிரிவின் பணிப்பாளர் கப்டன் ஹிரோயுக் ஹபுச்சி தலைமை தாங்கியிருந்தார்.

இந்த இருதரப்பு அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் சுமுகமாக, நட்புரீதியாக இடம்பெற்றது என்றும், பரஸ்பர உறவுகள் மற்றும் இருதரப்பு அரசுகளுக்கிடையிலான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தப்பட்டது என்றும் சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *