மேலும்

மாதம்: January 2019

ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சருடன் சிறிலங்கா தூதுவர் சந்திப்பு

ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சர் கேணல் ஜெனரல் அலெக்சான்டர் போமின், ரஷ்யாவுக்கான சிறிலங்கா தூதுவர் தயான் ஜெயதிலகவுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிங்கப்பூர் பிரதமருடன் சுதந்திர வணிக உடன்பாடு குறித்து பேசுவார் சிறிசேன

சிங்கப்பூருக்கு, பயணம் மேற்கொள்ளும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூங் பேச்சுக்களை நடத்தவுள்ளார் என்று சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முகநூல் அதிகாரிகள் குழுவுடன் மஹிந்த ராஜபக்ச பேச்சு

சிறிலங்கா எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, முகநூல் நிறுவனத்தின்  அதிகாரிகள்  குழுவுடன்  நேற்று   பேச்சுக்களை நடத்தியுள்ளார்.  மஹிந்த ராஜபக்சவின்  இல்லத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

சரத் என் சில்வாவுக்கு உச்சநீதிமன்றம் அழைப்பாணை

சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வாவை,  மன்றில் முன்னிலையாகுமாறு   உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

கோத்தா வழக்கின் போது அதிரடிப்படையினர் குவிப்பு – நீதிபதிகளிடம் முறையீடு

கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, கொழும்பு சிறப்பு மேல்நீதிமன்ற வளாகத்தில் அளவுக்கு அதிகமான அதிரடிப்படையினர் காணப்பட்டமைக்கு, சட்டமா அதிபர் தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிற்றர் ஜெனரல் திலீபா பீரிஸ் எதிர்ப்புத் தெரிவித்தார்.

முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

வில்பத்து சரணாலயத்தில், எட்டு சிறிலங்கா படையினரைக் கொன்றார்கள் என குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் இருவருக்கு 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் சிங்கப்பூர் பயணம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார் என கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விரைவில் மீண்டும் பிரதமர் ஆவேன் – மகிந்த சூளுரை

எதிர்க்கட்சித் தலைவர் செயலகத்தில் இருந்து வெளியேறி விரைவில் பிரதமர் செயலகத்துக்குச்  செல்வேன் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

11 சிறிலங்கா படையினருக்கு எதிராக இரண்டு வாரங்களுக்குள் குற்றப்பத்திரம் தாக்கல்

மோசமான குற்றங்களுடன் தொடர்புடைய 11 சிறிலங்கா படையினருக்கு எதிராக, விரைவில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிரான பிடியாணை குறித்து தெரியாது – சிறிலங்கா இராணுவம்

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை தொடர்பாக, சிறிலங்கா அதிகாரிகளுக்குத் தகவல்கள் ஏதும் தெரியாது என சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித்  அத்தபத்து தெரிவித்துள்ளார்.