மேலும்

மாதம்: January 2019

சிங்கப்பூரில் இருந்து திரும்பியதும் தாய்லாந்து கிளம்புகிறார் சிறிசேன

சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அடுத்து தாய்லாந்துக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்று அதிபர் செயலக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா படையினர் மீதான தாக்குதல் போர்க்குற்றம் – என்கிறார் ஐ.நா பொதுச்செயலர்

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த இரண்டு சிறிலங்கா படையினர், கொல்லப்பட்டு. ஆறு பேர் காயமடைந்த தாக்குதலை, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் கண்டித்துள்ளார்.

நாடாளுமன்றக் குழப்பம் – 59 எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கடந்த நொவம்பர் மாதம் நடந்த குழப்பங்களில் தொடர்புடைய 59 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்றக் குழு பரித்துரைத்துள்ளது.

மாலியில் துருப்புக்காவி மீது கண்ணிவெடி தாக்குதல் – 2 சிறிலங்கா படை அதிகாரிகள் பலி

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் சிறிலங்கா இராணுவ வாகனத் தொடரணி ஒன்று கண்ணிவெடியில் சிக்கியதில், துருப்புக்காவி ஒன்றில் பயணம் செய்த இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

ஜெனிவாவுக்கு தயாராகும் பிரித்தானியா – தமிழர் தரப்பின் கருத்தறியும் முயற்சியில் இறங்கியது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழ்மக்களினதும், தமிழ் அரசியல் தலைவர்களினதும் கருத்துக்களை அறிந்து கொள்ளும் முயற்சிகளில் பிரித்தானியா இறங்கியுள்ளது.

ஜப்பானிய, அவுஸ்ரேலிய தூதுவர்கள் சம்பந்தனுடன் சந்திப்பு

சிறிலங்காவுக்கான ஜப்பானியத்  தூதுவர் அகிரா சுகியமாவும், சிறிலங்காவில் பணிக் காலத்தை முடித்து நாடு திரும்பவுள்ள அவுஸ்ரேலிய  தூதுவர் பிரைஸ் ஹட்ச்ஸ்னும், நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவரது இல்லத்தில் சந்தித்து பேச்சு நடத்தினர்.

பலாலி விமான நிலைய ஓடுபாதை அபிவிருத்திக்கு 2 பில்லியன் ரூபா

பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை அபிவிருத்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் 2 பில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளது.

விமானந்தாங்கி கப்பலுக்கு மீண்டும் விநியோகம்- கட்டுநாயக்கவில் அமெரிக்காவின் தற்காலிக தளம்

அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜோன் சி ஸ்ரெனிஸ்  விமானந்தாங்கி கப்பலுக்கு சிறிலங்காவில் உள்ள அமெரிக்க கடற்படையின் தற்காலிக விநியோக மையத்தில் இருந்து, பொருள்களின் விநியோகம் இடம்பெறுவதாக அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது.

பிரிகேடியர் மீதான பிடியாணை வியன்னா உடன்பாட்டை மீறும் செயல் – சிறிலங்கா எதிர்ப்பு

லண்டனில் சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை, வியன்னா உடன்பாட்டை மீறும் செயல் என, பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகத்திடம் சிறிலங்கா தெரிவித்துள்ளது.

சிறிசேன படுகொலைச் சதித்திட்டம் – நாமல் ராஜபக்சவிடம் விசாரணை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று நீண்ட நேரம் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.