மேலும்

சரத் என் சில்வாவுக்கு உச்சநீதிமன்றம் அழைப்பாணை

சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வாவை,  மன்றில் முன்னிலையாகுமாறு   உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்  தீர்ப்பை விமர்சிக்கும் வகையில் மருதானையில் நடந்த  பொதுக்கூட்டத்தில் சரத் என் சில்வா  உரையாற்றினார்  என உச்சநீதிமன்றத்தில்  நீதிமன்ற அவமதிப்பு  மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம், முன்னாள் தலைமை நீதியரசர்   சரத்  என்  சில்வாவை  எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் நாள் உச்சநீதிமன்றில்  முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *