முகநூல் அதிகாரிகள் குழுவுடன் மஹிந்த ராஜபக்ச பேச்சு
சிறிலங்கா எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச, முகநூல் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவுடன் நேற்று பேச்சுக்களை நடத்தியுள்ளார். மஹிந்த ராஜபக்சவின் இல்லத்தில் இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.
தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான முகநூல் நிறுவனத்தின் பொதுகொள்கை பணிப்பாளர் அன்கி தாஸ் மற்றும் அதிகாரிகள் குழு இந்தப் பேச்சுக்களில் கலந்து கொண்டது.
இணையப் பாதுகாப்பு, பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சந்தை வாய்ப்பு, அதிகரித்து வரும் போலிச் செய்திகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
முகநூல் அதிகாரிகள் குழுவுடன் தாம் தொடர்ந்தும் நெருங்கி பணியாற்றவுள்ளதாக மகிந்தராஜபக்ச கீச்சகப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .