மேலும்

நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக வரும் பிரேரணை – ஐதேகவின் அடுத்த நகர்வு

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்றை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 12ஆம் நாள் நாடாளுமன்றம் கூடும் போது, ஐக்கிய தேசிய கட்சி இந்தப் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றவுள்ளது.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக கூறிவரும் நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.

இதற்கு முன்னர், சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதில்லை. ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அது சிறிலங்கா வரலாற்றில் இடம்பெறும் முதல் நிகழ்வாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *