நாடாளுமன்றத்தின் நாளைய அமர்வையும் புறக்கணிக்கிறது மகிந்த தரப்பு
நாடாளுமன்றத்தின் நாளைய அமர்வையும், புறக்கணிக்க போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்தார்.