மேலும்

2019 முதல் காலாண்டுக்கு 1735 பில்லியன் ரூபா ஒதுக்கீடு – கணக்கு அறிக்கைக்கு அங்கீகாரம்

2019 ஆம் ஆண்டு முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

சிறிலங்காவின் தற்போதைய அரசியல் குழப்பங்களினால்,  அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்னமும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

இந்த நிலையில்,   சிறிலங்கா அதிபரால் சர்ச்சைக்குரிய வகையில் நியமிக்கப்பட்ட நிதியமைச்சரான மகிந்த ராஜபக்ச, நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில், 2019 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால கணக்கு அறிக்கையை சமர்ப்பித்தார்.

இதன்படி, வரும் ஜனவரி தொடக்கம் மார்ச் வரையான காலப்பகுதிக்காக, 1735  பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *