மகிந்தவின் நிதி ஒதுக்கீடுகளை வெட்டும் பிரேரணை மீது நாளை வாக்கெடுப்பு
நாளைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பதா என்பது தொடர்பாக சிறிலங்காவில் ஆளும்கட்சி இன்னமும் முடிவு செய்யவில்லை என்று அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
நாளை காலை ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்த பின்னரே நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்பது பற்றி முடிவு செய்யப்படும்.” என்றும் அவர் கூறினார்.
மகிந்த ராஜபக்சவின், பிரதமர் செயலகத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை இடைநிறுத்தும், பிரேரணை மீது நாடாளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.