மேலும்

மகிந்தவை சபாநாயகர் ஏற்கவில்லை – ஐதேக

சிறிலங்காவின் பிரதமராக, மகிந்த ராஜபக்சவை, சபாநாயகர் கரு ஜெயசூரிய ஏற்றுக் கொள்ளவில்லை என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

பிரதமராக, மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டதை சபாநாயகர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், அவருக்கு பிரதமர் ஆசனம் வழங்கப்படும் என்றும் ஊடகங்களில் வெளியாகிய செய்திகளை அவர் நிராகரித்துள்ளார்.

‘மகிந்த ராஜபக்சவை பிரதமராக, சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை திட்டவட்டமாக கூற முடியும்.

சபாநாயகர் செயலகத்தில் இதுபற்றி விசாரித்தோம். மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் ஆசனத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்படவில்லை என்று அங்குள்ள அதிகாரிகள், தெரிவித்தனர்.

மகிந்த ராஜபக்சவை பிரதமராக, சபாநாயகர், ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை என்னால் தெளிவாக கூற முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *