மேலும்

கூட்டு அரசு கவிழ்ந்தது – சிறிலங்கா பிரதமராக பதவியேற்றார் மகிந்த

சிறிலங்காவின் பிரதமராக முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் பதவியேற்றுள்ளார்.  ஐதேக- சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணைந்த கூட்டு அரசாங்கம் கவிழ்ந்ததை அடுத்தே, இந்த திடீர் திருப்பம் நிகழ்ந்துள்ளது.

கூட்டு அரசாங்கத்துக்கு அளித்து வந்த ஆதரவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி விலக்கிக் கொள்வதாக, அதன் பொதுச்செயலர் மகிந்த அமரவீர இன்று மாலை அறிவித்தார்.

இந்த நிலையில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றுள்ளார்.

இதையடுத்து, அரசாங்கத்தைக் கொண்டு நடத்துவது மற்றும் அமைச்சரவை நியமனங்கள் தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில், தற்போது அதிபர் செயலகத்தில் கலந்துரையாடல் நடந்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *