அணை மற்றும் பாதை திட்டத்தில் கடன் பிரச்சினை – ஒப்புக் கொள்கிறது சீனா
தமது அணை மற்றும் பாதை திட்டத்தில் சில கடன் பிரச்சினைகள் இருப்பதாக, சீனாவின் துணை நிதி அமைச்சர் சூ ஜியாயி ஒப்புக் கொண்டுள்ளார் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமது வெளிநாட்டு முதலீடுகளில் கடன் நிலைத் தன்மை அம்சம் தொடர்பாக, சீன அரசாங்கம், நுண் – கண்காணிப்பை வலுப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தோனேசியாவில் அனைத்துலக நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின், கூட்டங்களின் பக்க நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“அணை மற்றும் பாதை திட்டத்தில், கடன் நிலைத்தன்மை ஒரு சிக்கலான பிரச்சினை. ஆனால், நாங்கள் அதனை கவனத்தில் கொள்வோம்.” என்றும் அவர் கூறியுள்ளார்.